அலங்காரம்

அலங்காரம்.
==========
அலங்காரம் செய்துகொண்டு வானில் பறக்கின்ற ஒரு பறவைக்கு,
அதிகபட்சம் என்ன தெரியும்.
அதன் அலங்காரம் மட்டும் அழகென்று தெரியும்.
புதிதாகக் கட்டப்பட்ட குளத்தங்கரையில் கரைகின்ற பனித்துளிகளுக்கு வானில் பறக்கின்ற பறவையின் அலங்காரம் என்னவாகத் தெரியும்.
குளத்தின் தனித்த மணலில் பறவையின் இறகுகளால் நான் ஏதும் குறுங்கவிதை எழுதும் போது நம் பூமிக்கான அலங்காரம் எல்லாமே அழகென்றும் தெரியலாம்- தெரியாமலும் போகலாம்.
அது ஒவ்வொருத்தரின் கிறுக்கல்களைப் பொறுத்தது......
===
இ.சுயாந்தன்.

Comments

Popular Posts