மடம்பி
மடம்பி.
●
நெருப்பினாலான பூமியின்
நீர்ப்பிளம்புகள் தட்டையானது.
நிழல்களாலான குளிர்ச்சியின்
வாடைகள் சதுரமானது.
தூக்கங்களாலான மரணத்தின்
நீள்தல்கள் வட்டமானது.
கண்ணீராலான கனவின்
களிம்புகள் வடிவமற்றது.....
நெருப்பு,
நிழல்,
தூக்கம்,
கண்ணீர்
நான்குமே "பிரமிள்" க்குள்
அடங்கக்கூடியது...
●
# சுயாந்தன்.
Comments
Post a Comment