மரமும் மலரும்

நீயொரு அழகில்லாத மலர்.
அதனால் உன்னைக்
கொய்துவிடாமல் காய்க்க
விட்டிருக்கிறேன்.
திரும்பவும் நீயொரு
விருட்சத்தை உண்டாக்கி விட்டு
ஆயிரம் பேரை அதில்
வேடிக்கை பார்க்கவிடு மலரே.
நீயொரு அழகான மரம்.
அதனால் இன்று உன்
விழுதுகளின் தாழ்விடத்தில்
பெருங்கனவு காணப்போகிறேன்.
நீ மலராயிருந்த இடம்
மரங்களால் நிரம்பி விட்டது.
நீ மரமாய் மாறிய பின் பூக்கள்
பூப்பதையே நிறுத்திவிட்டன.
என் கனவுகள் எல்லாம்
மரமாகவும் மலராகவும்,
நான் நடக்கும் அதோ
அந்த ராஜவீதிகளில்......

# மரமும் மலரும்.

Comments

Popular Posts